Monday 6 June 2011

கவிதை...கவிதை...அப்டியே படி...

சந்தோசதில்தான் வாழ்க்கை அடங்கயுள்ளது . சில நேரங்களில் நாம் அடையும் வெற்றியும் மகிழ்ச்சியின் மூலமாகவே கிடைக்கிறது . வாழ்க்கையை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் மகிழ்ச்சி உள்ளது .

வாழ்க்கை என்பது ஒரு பூச்செடி போன்றது . அதில் எத்தனை பூக்கள் உதிர்கின்றன என்பதைவிட , எத்தனை பூக்கள் மலர்கின்றன என்பதை நினைத்து மகிழ்ச்சிகொள்

நாம் நம் மனதை மகிழ்ச்சியுடனும் , தெளிவுடனும் வைத்திருந்தால் எந்த தடைகளும் , பிரச்சனைகளிலும் நம்மை நெருங்காது .

உனக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கின்றதோ அதை நோக்கி நீ பயணம் செய். எந்த கவலைகள் வந்தாலும் முகமகில்சியை மட்டும் விட்டுவிடாதே .

நீ மகிழ்ச்சியை தூர எறிந்தால் உன் வாழ்கையும் தூரமாகும் உனக்கே !

இன்னும் நிறய வச்சிருக்கேன் இது மாதிரி , அப்பப்ப பதிவிட்டு பயமுறுத்துறேன் ., சரியா?

Friday 3 June 2011

குப்பு குப்புன்னு ஊதுற சமூக எதிரி...

என் இனிய எதிரிகளே, என்னடா எதிரின்னு சொல்லறேன்னு பார்க்காதீங்க, எனக்கு பிடிக்காத ஒன்னை ஒருத்தர் செய்யும் பொது எனக்கு வரும் பாருங்க கோவம், அத அடக்கவே முடியாது., இப்ப கூட அந்த மாதிரி ஒரு கோவத்தை அங்கே காட்ட முடியாம இப்ப உங்க கிட்ட சொல்லபோறேங்க., அதுக்கு முன்னாடி நம்ம தமிழ் கலாசார வணக்கமுங்க!

தன்னோட குடும்பம், உறவினர், நண்பர் என்று யார் மேலயும் அக்கறை இல்லாத இவங்கள பத்திதாங்க சொல்ல போறேன், இல்லே இல்லே திட்ட போறேன் .

வேற யாரு நம்ம சிகரட் குடிக்கிரவங்கதாங்க அவங்க.,!


எங்கே உங்களுகேலாம் மூளைன்னு ஒன்னு இருக்கா? இல்லையா? சிகரெட்ட குடிக்கிறதுதான் குடிக்கிறீங்க அந்த கருமத்த கொஞ்சம் வெளியே பொய் குடிச்சு தொலயலாமேதானே ..? குடிச்சே தொலயாதீங்கன்ன கேட்கவா போறீங்க., அப்படி கேட்க நான் யாருங்க ., உங்க சகோதரியா? இல்லே தோழியா? சரி விடுங்க,

அன்னைக்கு கடைக்கு போயிருந்தேங்க, அங்கே ஒரு சமூகத்த பத்தி கவலையில்லாத ஒரு ஆளு அவ்வளவு பேர் நிக்கிரமேன்னு கவலை இல்லாம குப்பு குப்புன்னு புகையை ஊதுராறு., இவங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அடுத்தவங்கள பத்தி அக்கரேயே இல்லைங்க., ச்சே இந்த மாதிரி ஆளுங்க வீட்டுக்கு நான் ஒரு ஆளை கூபிட்டு வந்து அந்த ஆளு வீட்டுல எல்லோருக்கும் முன்னாடி குப்பு குப்புன்னு ஊத சொன்னா , இவர் எங்கே போயி முட்டுவாறு, இவங்கதாங்க சமூக எதிரி., இதுக்கு நியாயம் கேட்க உங்ககிட்ட வந்த நீங்களும் பம்முவீங்க, ஏன்னா உங்களில் பலபேர் சிகரட் ஆசாமியாதான் இருப்பீங்க., அதனால இங்கே கொட்டி தீத்துக்கிறேன் .

ஏன் நீங்களே அந்த ஆளுகிட்ட திருந்த சொல்லவேண்டியதுதானே அப்படின்னு கேட்பீங்க, அதுனால அந்த சண்முக எதிரி.... ச்சே ச்சே சமூக எதிரி கிட்டே என்னோட ஐடியை குடுத்து நாளைக்கு என்னோட ப்ளாக்க பாருன்னு சொல்லிட்டேன்., அவனுக்கு அதுவே பெரிய அடிதானே.,??

சரி இதெல்லாம் படிச்சிட்டு கமெண்டுல உங்க வீட்டுகாரர் குடிக்காமாட்டாராக்கும்., என்று கேட்குறது., என்னை திட்டுறது., கமெண்டே போடகூடதுன்னு நினைக்கிறது .,இப்படி எத நினச்சாலும் எனக்கு கவலையில்லை., இத படிச்சு உங்கள்ள யாராவது ஒருத்தர் திருந்தினாலும் சந்தோசமுங்க!

Thursday 2 June 2011

நானும் எனது மொக்கை கவிதையும்

கவிதைகள் என்ற பெயரில் கிருக்குவேனுங்க ., அதில் சில நல்லாருக்குன்னு எனக்கு தெரிஞ்சவங்க சொன்னதுனால அதில் ஒன்னு ரண்ட அப்பப்ப போஸ்ட் பன்னுறேனுங்க., தப்பு இருந்தா திட்டாதீங்க, சொல்லுங்க திருத்திக்கிறேன் . ஹி ஹி

யாராக இருக்க ஆசை!

தன் குஞ்சுக்காக
வேகுற வெயிலில்
ஒத்த காலில் நின்று
இறை தேடுமே கொக்கு
அது போல குணம் கொடு !

பசி என்று வந்த வண்டுக்கு
தேன் கொடுத்து உதவுமே பூ
அது போல மணம் கொடு !

தன் பசியை போக்க
காட்டில் மானை கொன்று
தின்னுமே புலி
அது போல ஊனம் இல்லாது
என்னைக் காத்துக்கொள்ளும்
திறன் கொடு !

தன்னை நம்பி வாழ்கின்ற
மீன்களை என்றுமே வற்றாது
காத்து கொள்ளுமே கடல்
அதுபோல தினம் எங்களை
காத்துக்கொள்!

உன்னையே நம்புகிறவர்களுக்கு
நீ எப்படியே
அப்படியே - என் மீது
மற்றவர்கள் கொண்ட நம்பிக்கையை
காப்பாற்றும் சக்தி கொடு!

( யாரிடம் இதெல்லாம் கேட்டேன் என்று குறிப்பிட்டால் நீங்கள் நான் இந்த மதம் என்று யோசிப்பீங்கள்ளே.......)

Tuesday 31 May 2011

பஸ் டிரைவரின் அநியாய குணங்கள்!

கொஞ்சம் நாளைக்கு முன்னால பஸ்சுல வந்துகிட்டு இருந்தேங்க ., நம்ம டிரைவரு ஓரமா வந்திக்கிட்டு இருந்த ஒரு வாலிபரை , அவர்க்கு முன்னாலே எப்படியாவது சிக்னல்ல முன்னாடி நிக்கனும்னு அந்த சைக்கிள் காரற ஓரங்கட்டிட்டங்க., அது மட்டும் இல்ல., அதோட விடாம பஸ்ஸ விட்டு இரங்கி அந்த சைக்கிள் காரற திட்ட வேற செய்ஞ்சாங்க ., இதுல அநியாயம் என்னன்னா., அந்த சைக்கில் காரர் ஒழுங்காதான் வந்தாருங்க.,



இவங்கள என்ன பண்ணலாம்.,? அப்புறம் தனியார் பஸ் காரங்க செய்ற அநியாயம் இன்னும் இருக்குங்க

ரெம்ப ஸ்பீடா போறது
யாரையாவது திட்ட வேண்டி வந்த அசிங்க அசிங்கமாக திட்டுறது., பொம்பளைங்க நாங்கதான் டிரைவருக்கு பக்குத்து சீட்டுல இருந்து தொலைக்கிறோம்.,
முன்னாடி போற பஸ்ஸ முந்துரதுக்கு இவங்க போற ஓவர் ஸ்பீடு
பாட்ட அலறவிடுறது ( கம்மியா இருந்தா கேட்க நல்லாருக்கும்)
பொம்பளைங்க இறங்க கொஞ்சம் லேட்டாகும்தானே, பயமுறுத்துற மாதிரி உடனே எடுக்குறது - மற்றும் இன்னும் பல.,
இவங்க அநியாயத்தை கேட்க அம்மாவே வரணுமா?

சரி சரி டிரைவர் கிட்ட நல்லகுணமே இல்லையா?
இருக்கே இந்த மாதிரி ப்ளாகுல திட்டுற என்னையெல்லாம் பஸ்சுல அலவ் பண்ணுறாங்களே !! ஹி ஹி ஹி

Saturday 28 May 2011

என் இனிய நண்பன்!

இது சும்மா நானே எப்போதோ எழுதினது., இந்த மாதிரி நிறைய இருக்கு, முடிஞ்சா எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா பதிவிடுறேங்க ..

தொடர்ந்து வந்த துன்பங்களால் சலித்து போனேன்
என்னுள் ஒரு மாற்றம்
எல்லாம் உன்னால் ,
உனது நட்பால் ,
என் கண்ணில் வழியும் நீரை துடைக்க காற்றாய் வந்தாய் ...
நான் சோகமாய் இருந்தபோது தென்றலாய் வருடவந்தாய் ...
என் வாழ்வில் இன்பத்திலும், துன்பத்திலும்
பங்கு பெரும் எனது இனிய நண்பன்
இசையே ...



என்னக்கு பிடித்த , வடிவமைத்த கவிதைகளில் ஒன்று !
நண்பர்களே! இந்த கவிதை உங்கள் விரும்பத்தக்கதாக இருதால் உங்கள் முத்திரையை பதிக்கவும் .

சும்மா ஒரு பதிவுங்க!

அறிமுகம் ஆகிறேன் என்பதால் சும்மாவாச்சும் ஒரு பதிவு போடணும்னு இத போட்டேன், இனி வர்ற நாளுல கொஞ்சம் உருப்படியா போடுறேனுங்க., ட்ய்பிங் இப்பதான் பழகுறேனுங்க அதனாலதானுங்க -


நீ ஒரு அரிசி, தினமும் என்னை தரிசி ,
நீ ஒரு பருப்பு , என்மேல் காட்டாதே வெறுப்பு ,
நீ ஒரு மல்லி, உன் அக்கா எனக்கு வில்லி ,
நீ ஒரு சேமியா, என் அம்மா உனக்கு மாமியார் ,
நீ ஒரு பெருங்காயம், என் மனதில் ஏற்படுத்திவிடாதே 'பெரு'ங்காயம்,
நீ ஒரு உப்பு , என்னை நினைக்காமல் இருப்பது தப்பு ,
நீ ஒரு புளி , என்மேல் போடாதே பழி!