Tuesday 31 May 2011

பஸ் டிரைவரின் அநியாய குணங்கள்!

கொஞ்சம் நாளைக்கு முன்னால பஸ்சுல வந்துகிட்டு இருந்தேங்க ., நம்ம டிரைவரு ஓரமா வந்திக்கிட்டு இருந்த ஒரு வாலிபரை , அவர்க்கு முன்னாலே எப்படியாவது சிக்னல்ல முன்னாடி நிக்கனும்னு அந்த சைக்கிள் காரற ஓரங்கட்டிட்டங்க., அது மட்டும் இல்ல., அதோட விடாம பஸ்ஸ விட்டு இரங்கி அந்த சைக்கிள் காரற திட்ட வேற செய்ஞ்சாங்க ., இதுல அநியாயம் என்னன்னா., அந்த சைக்கில் காரர் ஒழுங்காதான் வந்தாருங்க.,



இவங்கள என்ன பண்ணலாம்.,? அப்புறம் தனியார் பஸ் காரங்க செய்ற அநியாயம் இன்னும் இருக்குங்க

ரெம்ப ஸ்பீடா போறது
யாரையாவது திட்ட வேண்டி வந்த அசிங்க அசிங்கமாக திட்டுறது., பொம்பளைங்க நாங்கதான் டிரைவருக்கு பக்குத்து சீட்டுல இருந்து தொலைக்கிறோம்.,
முன்னாடி போற பஸ்ஸ முந்துரதுக்கு இவங்க போற ஓவர் ஸ்பீடு
பாட்ட அலறவிடுறது ( கம்மியா இருந்தா கேட்க நல்லாருக்கும்)
பொம்பளைங்க இறங்க கொஞ்சம் லேட்டாகும்தானே, பயமுறுத்துற மாதிரி உடனே எடுக்குறது - மற்றும் இன்னும் பல.,
இவங்க அநியாயத்தை கேட்க அம்மாவே வரணுமா?

சரி சரி டிரைவர் கிட்ட நல்லகுணமே இல்லையா?
இருக்கே இந்த மாதிரி ப்ளாகுல திட்டுற என்னையெல்லாம் பஸ்சுல அலவ் பண்ணுறாங்களே !! ஹி ஹி ஹி

Saturday 28 May 2011

என் இனிய நண்பன்!

இது சும்மா நானே எப்போதோ எழுதினது., இந்த மாதிரி நிறைய இருக்கு, முடிஞ்சா எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா பதிவிடுறேங்க ..

தொடர்ந்து வந்த துன்பங்களால் சலித்து போனேன்
என்னுள் ஒரு மாற்றம்
எல்லாம் உன்னால் ,
உனது நட்பால் ,
என் கண்ணில் வழியும் நீரை துடைக்க காற்றாய் வந்தாய் ...
நான் சோகமாய் இருந்தபோது தென்றலாய் வருடவந்தாய் ...
என் வாழ்வில் இன்பத்திலும், துன்பத்திலும்
பங்கு பெரும் எனது இனிய நண்பன்
இசையே ...



என்னக்கு பிடித்த , வடிவமைத்த கவிதைகளில் ஒன்று !
நண்பர்களே! இந்த கவிதை உங்கள் விரும்பத்தக்கதாக இருதால் உங்கள் முத்திரையை பதிக்கவும் .

சும்மா ஒரு பதிவுங்க!

அறிமுகம் ஆகிறேன் என்பதால் சும்மாவாச்சும் ஒரு பதிவு போடணும்னு இத போட்டேன், இனி வர்ற நாளுல கொஞ்சம் உருப்படியா போடுறேனுங்க., ட்ய்பிங் இப்பதான் பழகுறேனுங்க அதனாலதானுங்க -


நீ ஒரு அரிசி, தினமும் என்னை தரிசி ,
நீ ஒரு பருப்பு , என்மேல் காட்டாதே வெறுப்பு ,
நீ ஒரு மல்லி, உன் அக்கா எனக்கு வில்லி ,
நீ ஒரு சேமியா, என் அம்மா உனக்கு மாமியார் ,
நீ ஒரு பெருங்காயம், என் மனதில் ஏற்படுத்திவிடாதே 'பெரு'ங்காயம்,
நீ ஒரு உப்பு , என்னை நினைக்காமல் இருப்பது தப்பு ,
நீ ஒரு புளி , என்மேல் போடாதே பழி!